சிரியாவில் இஸ்ரேல் தரைவழி தாக்குதல் - ஒருவர் கைது

November 4, 2024

இஸ்ரேல் படையினர் சிரியாவில் செயல்பட்டு வரும் ஆயுதக்குழுக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி, டரா நகரில் அலி சுலைமான் அல் அசி என்ற நபரை கைது செய்துள்ளனர். ஹமாஸ் ஆயுதக்குழுவிற்கு எதிரான போர் அறிவித்து, காசா முனையில் இஸ்ரேல் கடுமையான தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதில், 43,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான இந்த போரின் நிலை கடந்த ஓராண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. லெபானானில் உள்ள ஹிஸ்புல்லா […]

இஸ்ரேல் படையினர் சிரியாவில் செயல்பட்டு வரும் ஆயுதக்குழுக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி, டரா நகரில் அலி சுலைமான் அல் அசி என்ற நபரை கைது செய்துள்ளனர்.

ஹமாஸ் ஆயுதக்குழுவிற்கு எதிரான போர் அறிவித்து, காசா முனையில் இஸ்ரேல் கடுமையான தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதில், 43,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான இந்த போரின் நிலை கடந்த ஓராண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. லெபானானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தி வருகிறது. மேலும், ஈரான், ஹமாஸ், ஹிஸ்புல்லா, மற்றும் பிற பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கிறது. இந்நிலையில், இஸ்ரேல் படையினர் சிரியாவில் செயல்பட்டு வரும் ஆயுதக்குழுக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி, டரா நகரில் அலி சுலைமான் அல் அசி என்ற நபரை கைது செய்துள்ளனர். அவர், இஸ்ரேல் ராணுவத்தின் தகவல்களை ஈரானுக்கு அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu