லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணமடைந்ததாக தகவல்கள் வந்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர் தொடர்ந்து நிலவுகிறது. இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து, இஸ்ரேல் ராணுவம் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இவ்வழி தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து ஹிஸ்புல்லா அமைப்பின் சார்பில் எவ்வித தகவலும் இன்னும் வெளியாகவில்லை.