காசாவில் உள்ள தராஜ் மாவட்டத்தில் பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 100 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் முதல் காசா போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பை ஒழித்து கட்டுவதற்கு இஸ்ரேல் தீவிரமாக தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை குழந்தைகள், பெண்கள் உட்பட முப்பதாயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் கிழக்கு காசாவில் உள்ள தராஜ் மாவட்டத்தில் ஒரு பள்ளியின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 100 பேர் பலியாகி உள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பாதிப்படைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான மக்கள் தங்கவைக்கப்பட்டு இருப்பதை அறிந்தும் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது என்று ஹமாஸ் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.