ஹமாஸ் படையினரின் புலனாய்வு பிரிவு துணைத் தலைவர் ஷாதி ஃபாரூத் ஆவார். அவர், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.ஹமாஸ் படையினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தீவிர தாக்குதலில், அப்படையைச் சேர்ந்த முக்கிய நபர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். அண்மையில், ஹமாஸ் படையின் துணை தளபதிகள் அப்துல் ரஹ்மான், கலீல் மஹஜாஸ், கலீல் டெத்தாரி ஆகிய 3 பேரை இஸ்ரேல் ராணுவம் கொன்றது. அவர்களைத் தொடர்ந்து, தற்போது, ஷாதி ஃபாரூத் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதலில், இதுவரை காசாவில் 7000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர, இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் படையினரிடம் இருக்கும் பிணை கைதிகளும் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.