பெய்ரூட் தெற்கு பகுதிகளில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

October 16, 2024

பெய்ரூட்டின் தெற்கில் உள்ள புறநகர் பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதாக லெபனான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடக்கும் போரில், ஹமாஸ் ஹிஸ்புல்லாவினால் ஆதரிக்கப்படுகிறது. இஸ்ரேல் மீது தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு பதிலாக, இஸ்ரேல் ராணுவம் லெபனானில் தனது தாக்குதல்களை அதிகரித்துள்ளது. இதனால் 12 […]

பெய்ரூட்டின் தெற்கில் உள்ள புறநகர் பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதாக லெபனான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடக்கும் போரில், ஹமாஸ் ஹிஸ்புல்லாவினால் ஆதரிக்கப்படுகிறது. இஸ்ரேல் மீது தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு பதிலாக, இஸ்ரேல் ராணுவம் லெபனானில் தனது தாக்குதல்களை அதிகரித்துள்ளது. இதனால் 12 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்நிலையில், பெய்ரூட்டின் தெற்கில் உள்ள புறநகர் பகுதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக லெபனான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் கானா நகரில் நடைபெற்ற தாக்குதலில் 10 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu