சிரியாவில் துப்பாக்கிச்சூடு - அரசு ஆதரவு படையைச் சேர்ந்த 22 வீரர்கள் பலி

April 20, 2024

சிரியாவில் அரசு ஆதரவு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 22 வீரர்கள் பலியாகி உள்ளனர். அரசு ஆதரவு படையினர் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 22 வீரர்கள் உயிரிழந்தனர். இது குறித்து சிரியா மனித உரிமைகள் அமைப்பு கூறியதாவது, அல் - அசாத் அரசுக்கு ஆதரவாக குட்ஸ் பிரிகேட் படை செயல்பட்டு வருகிறது. இந்த படையை சேர்ந்தவர்கள் சுக்னா நகருக்கு அருகே வியாழனன்று இரவு பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது […]

சிரியாவில் அரசு ஆதரவு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 22 வீரர்கள் பலியாகி உள்ளனர்.

அரசு ஆதரவு படையினர் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 22 வீரர்கள் உயிரிழந்தனர். இது குறித்து சிரியா மனித உரிமைகள் அமைப்பு கூறியதாவது, அல் - அசாத் அரசுக்கு ஆதரவாக குட்ஸ் பிரிகேட் படை செயல்பட்டு வருகிறது. இந்த படையை சேர்ந்தவர்கள் சுக்னா நகருக்கு அருகே வியாழனன்று இரவு பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 22 வீரர்கள் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று பரவலாக கருதப்படுகிறது. இந்த படையில் பெரும்பாலும் பாலஸ்தீனர்களே உறுப்பினர்களாக உள்ளனர். இந்த படை ரஷ்யாவின் உதவியுடன் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu