ஹமாஸ் அமைப்பினர் ரமலானுக்குள் தங்கள் நாட்டிலிருந்து பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் கெடு விதித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் தற்போது தெற்கு காசாவில் கடும் தாக்குதலை தினமும் நடத்தி வருகிறது. இந்நிலையில் தங்கள் நாட்டிலிருந்து கடத்தி செல்லப்பட்ட பிணை கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் ரமலானுக்குள் விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் கெடு விதித்துள்ளது. இல்லையேல், ராஃபா பகுதியில் கடும் தாக்குதல் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் பென்னி காண்ட்ஸ் கூறியுள்ளதாவது, வரும் ரமலான் மாத தொடக்கத்துக்குள் பிணைக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் அமைப்பினர் அனுப்ப வேண்டும். இல்லையென்றால், காசாவில் தொடர்ந்து சண்டை நீடிக்கும். ராஃபா மீதான தரைவழி தாக்குதல் தீவிரம் அடையும். இதனை உலக நாடுகளும் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானின் போது அல்-அக்சா மசூதியை பயன்படுத்துவது தொடர்பாக ஹமாசுக்கும் இஸ்ரேலுக்கும் பலமுறை பிரச்சனை உருவெடுத்துள்ளது. எனவே ரமலான் மாத தொடக்கத்தை இஸ்ரேல் அரசு கெடுவாக அறிவித்துள்ளது. பாலஸ்தீனர்களின் கடைசி புகலிடமாக ராஃபா நகரம் இருக்கிறது. அந்த நகருக்குள் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் அதிகரித்தால் மாபெரும் மனித பேரழிவு ஏற்படும் என்று ஐநா அமெரிக்கா உட்பட பல நாடுகள் எச்சரிக்கை செய்துள்ளனர். இதுவரை காசா ஊரில் இருந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை கடந்துள்ளது.