இஸ்ரேலில் போர் தீவிரமடைந்து வருவதால் ஜெருசலேம் புனித பயணத்தை தவிர்க்க வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
இஸ்ரேல் - ஹாமசா இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் அங்கு பல இடங்களில் ஏவுகணை வீசப்பட்டு பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரேல் பகுதியில் உள்ள ஜெருசலேம் நகருக்கு புனித பயணம் மேற்கொண்டு வருபவர்களை கவனத்துடன் அந்த நாட்டு அரசு பாதுகாத்து வருகிறது. தமிழகத்திலிருந்து பத்திற்கும் மேற்பட்டோர் ஜெருசலேம் சென்றுள்ளனர். அவர்கள் பாதுகாப்பான நிலையில் இருந்தாலும், போர்பதற்றம் உள்ளதாலும் அவர்கள் பாதுகாக்க விரும்புவதாலும் ஜெருசலேம் புனித பயணத்தை மேற்கொள்பவர்கள் தவிர்ப்பது நல்லது என்று தமிழக அரசு அதிகாரிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.