ஏமன் அருகே செங்கடல் பகுதியில் இஸ்ரேலிய சரக்கு கப்பல் கடத்தப்பட்டது. இதற்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரில் ஹமாஸ் அமைப்பிற்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் செங்கடல் பகுதிக்கு வரும் இஸ்ரேலிய கப்பல்களை கடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் துருக்கியில் இருந்து கேலக்ஸி லீடர் என்ற சரக்கு கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் இஸ்ரேலியர்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 52 பணியாளர்கள் பயணம் செய்தனர். இந்த கப்பல் ஏமன் அருகே செங்கடல் பகுதிக்கு வந்த போது திடீரென காணாமல் போனது. இந்த கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அனுப்பி இருக்க கூடும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. மேலும் இதுகுறித்து இஸ்ரேல் கூறுகையில், இது இஸ்ரேல் நாட்டிற்கு சொந்தமான கப்பல் இல்லை என்றும் ஆபிரகாம் உங்கர் என்ற இஸ்ரேலிய தொழிலதிபருக்கு சொந்தமானது என்றும் விளக்கம் அளித்துள்ளது. இந்த கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்தார்.