ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
காசாவில் 15 மாதங்களுக்கு மேலாக இடம்பெறும் போர் காலத்தின்போது, சுமார் 46 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து எல்லை பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதன் முடிவாக, போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஹமாஸ் அமைப்பினர் 33 பணய கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டனர். அதேபோல் இஸ்ரேல் தங்களிடம் உள்ள கைதிகளை விடுவிக்கவும், புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு சொந்த கிராமத்திற்கு செல்ல வழியமைக்கவும் ஒப்புக்கொண்டது. ஹமாஸ் அமைப்பு இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், 2023ல் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் 15 மாதங்களுக்குப் பிறகு முடிவுக்கு வருகிறது.