இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 22 பேர் காயமடைந்தனர்.
பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இதே அமைப்பை போன்று வேறு சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை மற்றும் மேற்கு கரையில் செயல்பட்டு வருகிறது. இங்கு மேற்கு கரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பகுதிகளில் அவ்வப்போது இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனிய குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வரும்.
இந்நிலையில், காசா முனையில் ஹமாஸ் குழுவின் சோதனை சாவடிகள் மீது நேற்று இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை தொடர்ந்து பாலஸ்தீனியர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். அப்போது நடைபெற்ற போராட்டத்தில் பாலஸ்தீனியர்கள் 22 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு அந்த பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.