இஸ்ரேல் ஆக்கிரமித்த மேற்கு கரை பகுதியில் நடந்த தாக்குதலில் ஹமாஸ் படை தளபதி உட்பட இரண்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களை இஸ்ரேல் ராணுவத்தினர் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஹமாஸ் படை தளபதி மற்றும் இரண்டு பாலஸ்தீனர்கள் பலியாகினர். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இதுவரை மேற்கு கரையில் 12க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 460 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர் என்று பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், துபாஸ் நகரத்தில் உள்ள அல்பரா அகதிகள் முகாமில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஹமாசின் தளபதி முகமது தராக்மே பலியாகினார். அவருடைய காரில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதையடுத்து அவர் மீது ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்திக் கொன்றனர். அவர் இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தார் என இஸ்ரேல் ராணுவ தரப்பில் கூறப்படுகிறது. இந்த மோதலில் மேலும் 2 பாலஸ்தீனர் நேற்று கொல்லப்பட்டனர்.