நேதன்யாகுவை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் திட்டம்

April 30, 2024

நேதன்யாகுவுக்கு எதிராக கைதுவாரண்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விரைவில் வெளியிட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. காசா போரில் இதுவரை 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு மக்கள் நிவாரண பொருட்களின்றி தவிக்கின்றனர். உணவு மற்றும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தொற்றுநோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ரபா நகரை தாக்கப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்துகின்றனர். இன்று மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. […]

நேதன்யாகுவுக்கு எதிராக கைதுவாரண்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விரைவில் வெளியிட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

காசா போரில் இதுவரை 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு மக்கள் நிவாரண பொருட்களின்றி தவிக்கின்றனர். உணவு மற்றும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தொற்றுநோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ரபா நகரை தாக்கப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்துகின்றனர். இன்று மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. இதற்கிடையே அமெரிக்க பல்கலைக்கழகங்களில் காசா போருக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைகின்றன. இது ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் போர் குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மற்றும் ராணுவ மந்திரி யோவ் கல்லண்ட், ராணுவ தலைமை தளபதி ஹர்சி ஹலேவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்றும் இதற்கான கைதுவாரண்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விரைவில் வெளியிட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் குறித்து இஸ்ரேல் கவலை அடைந்து இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கவும் சர்வதேச நீதிமன்றம் ஆராய்ந்து வருகிறது. நேதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கும் முயற்சியை தடுக்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

பயங்கரவாதம், போர் குற்றம், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரித்து வரும் சர்வதேச நீதிமன்றத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உறுப்பினராக இல்லை. எனவே இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சர்வதேச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பை இஸ்ரேல் ஏற்கவில்லை. விசாரணைக்கும் ஒத்துழைக்கவில்லை. எனினும், காசா, மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலம் ஆகிய பகுதிகளுக்கு அதிகார வரம்பு இருப்பதாக சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu