காசா முனையில் பணய கைதிகளாக உள்ளவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 5 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 42 கோடி ரூபாய்) என்ற சன்மானத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இச்சன்மான அறிவிப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டார். பணய கைதிகளை கண்டுபிடித்து இஸ்ரேலுக்கு ஒப்படைக்கும் நபரின் அடையாளம் பாதுகாக்கப்படும். மேலும் அவர்களுக்கு பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும். இதனை தொடர்ந்து, இஸ்ரேல், பணய கைதிகளின் இருப்பிடங்களை அறிந்து அவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு போரை தொடர்வதாக அறிவித்துள்ளது. பணய கைதிகளுக்கு தீங்கு விளைவிக்க முயற்சித்தால் அவர்கள் கொல்லப்படுவர் என்ற எச்சரிக்கையை பிரதமர் நெதன்யாகு விடுத்துள்ளார்.