இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் பலியாகி உள்ளார்.
தற்போது இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் தீவிர மோதல் நடைபெற்று வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடியே அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் மேற்கு களிலி பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலை சேர்ந்த அமரியா என்ற ராணுவ அதிகாரி பலியாகி உள்ளார். இவர் ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்து உள்ளார் என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒப்பந்தப்படி தெற்கு லெபனான் பகுதியிலிருந்து ஆயுதங்களை விடுத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.