ராபாவில் இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 9 பேர் பலி

February 9, 2024

காசாவின் தெற்கு பகுதியான ராஃபாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர். ராபாவில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மற்றும் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அதில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர். மேலும் காயமுற்றவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவத்தை சேர்ந்த தரைப்படை தற்போது கான் யூனிஸ் பகுதியில் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தெற்கு நகரமான ராபாவை நோக்கி […]

காசாவின் தெற்கு பகுதியான ராஃபாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர்.

ராபாவில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மற்றும் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அதில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர். மேலும் காயமுற்றவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவத்தை சேர்ந்த தரைப்படை தற்போது கான் யூனிஸ் பகுதியில் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது தெற்கு நகரமான ராபாவை நோக்கி தாக்குதல் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது என இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இதனால் லட்சக்கணக்கான மக்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் ராபா எல்லை பகுதி வழியாக எகிப்துக்குள் தஞ்சம் புகும் நிலை உருவாகியுள்ளது. இதற்கிடையே ராபா பகுதியில் படைகள் முன்னேறி இருப்பது இஸ்ரேல் எகிப்து இடையே நீடித்து இருக்கும் உடன்படிக்கையை மீறுவது ஆகும் என்று எகிப்து கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu