காசாவில் அல்ஷிபா மருத்துவமனை மீது தாக்குதல் - பிடென் எச்சரிக்கை

November 14, 2023

காசாவில் அல்ஷிபா மருத்துவமனை சுற்றி கடும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. காசாவில் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த மருத்துவமனையில் பாதாள சுரங்கத்தில் பிணைய கைதிகள் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் வைத்துள்ளதாக ராணுவம் குறை கூறியுள்ளது. அங்கு சுரங்கம் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. இதனால் அந்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் தஞ்சம் புகுந்தோர் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மருத்துவமனையில் மின்சாரம் மற்றும் அத்தியாச பொருட்கள் இல்லை. […]

காசாவில் அல்ஷிபா மருத்துவமனை சுற்றி கடும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது.

காசாவில் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த மருத்துவமனையில் பாதாள சுரங்கத்தில் பிணைய கைதிகள் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் வைத்துள்ளதாக ராணுவம் குறை கூறியுள்ளது. அங்கு சுரங்கம் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. இதனால் அந்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் தஞ்சம் புகுந்தோர் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மருத்துவமனையில் மின்சாரம் மற்றும் அத்தியாச பொருட்கள் இல்லை. குழந்தைகளை காப்பதற்கான இன்குபேட்டர் போன்ற சாதனங்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளன. இந்த உடனடி தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று வந்த அழைப்புகளை இஸ்ரேலிய பிரதமர் நிராகரித்து விட்டார். பிணை கைதிகள் விடுவிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என்று கூறியுள்ளார்.

எனினும் இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஹமாஸ் அமைப்பும், மருத்துவ ஊழியர்களும் மறுத்துள்ளனர். குழந்தைகள் இறக்கக்கூடிய அபாயத்தில் இருக்கின்றனர். இது குறித்து அமெரிக்க அதிபர் கூறுகையில், மருத்துவமனையில் ராணுவ படையின் ஊடுருவல் குறைவான அளவில் இருக்கும் என்று தான் நம்புவதாகவும், இந்த மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu