ரபா நகரத்தின் மையப் பகுதிக்கு இஸ்ரேல் ராணுவம் முன்னேறியுள்ளனர்.
காசாவில் ரபா நகரில் அல்ஹாவுதா மசூதி பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கி வாகனங்கள் நேற்று நுழைந்தன. கடந்த மூன்று வாரங்களாக ரபாவை சுற்றி வளைத்து தாக்குதலுக்கு தயாரான போதிலும் தற்போது மையப்பகுதிக்கு முன்னேறியுள்ளனர். திங்களன்று பீரங்கி குண்டுகள் மற்றும் விமான தாக்குதல் மூலம் ரபா நகரின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் இந்த கடுமையான தாக்குதலுக்கு ஐநா உட்பட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பலமுறை இடம்பெயர்ந்த பொதுமக்கள் தங்கள் கூடாரத்தை விட்டு வெளியேறு வருகின்றனர்.
ரபா நகரில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 45 பேர் பலியாகினர். இந்நிலையில் காசாவில் நேற்று இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 37 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே இஸ்ரேல் படை ரபா நகரத்தை விட்டு முழுமையாக வெளியேறினால்தான் பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க முடியும் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது.