காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடக்கம்

March 30, 2024

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு காசாவில் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியுள்ளார். இந்த தகவலை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னதாக இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானுக்கு முன்பாக தற்காலிக போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எகிப்து, கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதற்காக முயற்சி செய்தன. இருந்தபோதிலும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே சுமுகமான உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில், ஐக்கிய நாடு சபையில் உடனடியான போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் போர் நிறுத்தம் […]

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு காசாவில் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியுள்ளார்.

இந்த தகவலை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னதாக இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானுக்கு முன்பாக தற்காலிக போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எகிப்து, கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இதற்காக முயற்சி செய்தன. இருந்தபோதிலும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே சுமுகமான உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில், ஐக்கிய நாடு சபையில் உடனடியான போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் விடுதலை தொடர்பாக மீண்டும் உடன்படிக்கைக்கு வர பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கத்தார் செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்தது. இது குறித்து இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டின் தலைவர் டேவிட் பரனேயா நேதன்யாகுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. அதன்படி போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதிநிதிகளை அனுப்பவுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu