இந்தியா, இந்த வருடம் சந்திரயான் 3 விண்வெளி திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. அதன்படி, நிலவின் தென் துருவப் பகுதியில் முதல் முறையாக கால் பதித்த நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவின் இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில், ஐஸ்லாந்து நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இதற்காக, ஐஸ்லாந்து நாட்டின் ஹூசவிக் அருங்காட்சியகம், அந்நாட்டின் உயரிய விருதை இஸ்ரோவுக்கு வழங்கியுள்ளது. லீப் எரிக்சன் என்ற நிகரற்ற ஆராய்ச்சியாளரின் பெயரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் ‘லீப் எரிக்சன் லூனார் விருது’, 2023 ஆம் ஆண்டில் இஸ்ரோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் தூதர் பாலசுப்ரமணியம் ஷியாம், இந்த விருதை இஸ்ரோ சார்பாக பெற்றுக் கொண்டார்.