சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிகரமான நிறைவிற்காக இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத்துக்கு 2024 சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் (IAF) உலக விண்வெளி விருது வழங்கப்பட்டுள்ளது. இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற விழாவில் இந்த விருது சோம்நாத்துக்கு வழங்கப்பட்டது.
நிலவின் புவியியல் தொடர்பான புதிய தகவல்களை சந்திரயான்-3 திட்டம் வெளிப்படுத்தியதற்காக IAF இந்தியாவை பாராட்டியது. விண்வெளியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்களுக்கு வழங்கப்படும் இந்த மதிப்புமிக்க விருது, கடந்த ஆண்டு விண்வெளியை அணுகக்கூடியதாக மாற்றுவதில் அவர் ஏற்படுத்திய தாக்கத்திற்காக எலோன் மஸ்க்கிற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.