மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ பணியாற்றி வருகிறது. இந்த நிலையில், மனிதர்களை சுமந்து செல்லும் கிரையோஜனிக் ராக்கெட்டுக்கான முக்கிய எஞ்சின் பரிசோதனை கடந்த 13ஆம் தேதி நிகழ்த்தப்பட்டுள்ளது. இது வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ககன்யான் திட்டத்திற்கு CE 20 கிரையோஜனிக் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இதன் வழியாக அதிக சுமை கொண்ட எல் வி எம் ராக்கெட் சுமந்து செல்லப்படுகிறது. இந்த ராக்கெட் என்ஜினின் சோதனை மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ புரோபல்ஷன் மையத்தில் நிகழ்த்தப்பட்டது. ஏழாவது முறையாக இந்த இன்ஜின் பரிசோதனை நிகழ்த்தப்படுகிறது. இந்த சோதனையில், பல்வேறு அசாதாரண சூழல்களில் இந்த இன்ஜினின் செயல் திறன் அளவீடு செய்யப்பட்டது. மனிதர்களை சுமந்து செல்வதற்கு ஏற்ற வகையில் இது உள்ளதா என்பது மீண்டும் மீண்டும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அண்மையில் நிகழ்த்தப்பட்ட முக்கிய பரிசோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.