சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா எல் 1 விண்கலம் தனது இறுதி கட்ட பயணத்தில் உள்ளது. எல் 1 என்ற சுற்றுவட்ட பாதையில் அது நிலைநிறுத்தப்பட உள்ளது. எல் 1 சுற்றுவட்ட பாதையில் ஏற்கனவே நாசாவின் 3 விண்கலங்கள் உள்ளன. மேலும், ஐரோப்பிய விண்வெளி மையம் மற்றும் நாசா ஆகியவை இணைந்து அனுப்பிய விண்கலம் ஒன்று உள்ளது. எனவே, ஆதித்யா எல் 1 கலத்துக்கான இருப்பிடத்தை விழிப்புணர்வுடன் தேர்வு செய்யும் பரிசோதனையில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.“எல் 1 சுற்றுவட்ட பாதை அளவை ஒப்பிட்டால், அங்கு மிகவும் குறைவான விண்கலங்களே உள்ளன. எனவே, ஆதித்யா எல் 1 கலத்தை அங்கே நிலை நிறுத்துவதில் சிக்கல்கள் இல்லை. எனினும், மற்ற விண்கலங்களுடன் நெருங்கி செல்வதை தடுக்க, தகுந்த இருப்பிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.மேலும், விண்கலத்தின் இருப்பிடம் தொடர்பாக அவ்வபோது பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக, நாசாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளோம்” என இஸ்ரோ தெரிவித்துள்ளது.