இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோ, ஒவ்வொரு நாளும் 100 சைபர் தாக்குதல்களை எதிர்கொள்வதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பங்கேற்று பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், இந்த தகவலை தெரிவித்துள்ளார். ராக்கெட் தொழில்நுட்ப துறையில், சைபர் தாக்குதல்கள் மிகவும் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அதி நவீன சாஃப்ட்வேர்கள் மற்றும் அதி நவீன சிப்பு ஹார்டுவர்கள் கொண்டு, மிகவும் பாதுகாப்பான முறையில் ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் தயாரிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். மேலும், செயற்கைக்கோள் ஒன்றை கண்காணிக்கும் துறையில் சைபர் தாக்குதலால் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறியுள்ளார். எனவே, சைபர் தாக்குதல் பிரிவில் இஸ்ரோ மிகக் கடுமையாக உழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.