இஸ்ரோ, 5 ஆண்டுகளில், 177 வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி, 1000 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது

December 16, 2022

இஸ்ரோ அமைப்பு, கடந்த 5 ஆண்டுகளில், 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம், 1000 கோடி ரூபாய் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 2018 முதல் நவம்பர் 2022 வரை, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, கொலம்பியா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்த […]

இஸ்ரோ அமைப்பு, கடந்த 5 ஆண்டுகளில், 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம், 1000 கோடி ரூபாய் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 2018 முதல் நவம்பர் 2022 வரை, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, கொலம்பியா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்கள் இஸ்ரோ மூலம் ஏவப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். வணிக ஒப்பந்தத்தின் படி ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள் மூலம், கிட்டத்தட்ட 94 மில்லியன் அமெரிக்க டாலர்களும், 46 மில்லியன் யூரோக்களும் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu