மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ பணியாற்றி வருகிறது. இந்த திட்டத்திற்கான முக்கிய புரோபல்ஷன் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக இஸ்ரோ தற்போது தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில், கடந்த புதன்கிழமை, ககன்யான் புரோபல்ஷன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் போது, உச்சகட்ட அழுத்தம் மற்றும் வெப்பத்தில் ககன்யான் கலத்தின் தாங்கு திறன் மற்றும் செயல்திறன் பரிசோதனை செய்யப்பட்டது. இது வெற்றிகரமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ககன்யான் திட்டத்தின் படி, மனிதர்கள் விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, 3 தினங்கள் புவி சுற்றுவட்டப் பாதையில் பயணித்து, அதன் பின் மீண்டும் பூமியில் தரை இறங்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.