இஸ்ரோ புதிய ராணுவ செயற்கைக்கோள் திட்டம்

இந்திய ராணுவம் 2026ஆம் ஆண்டில் ஜிசாட்-7பி என்ற புதிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு விண்வெளி பணிகளுக்கு செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்பி வருகிறது, அவை வானிலை, பேரிடர் தகவல்கள், பூமி கண்காணிப்பு, மற்றும் வாகனங்களுக்கு வழிகாட்டுதல் போன்ற உதவிகளை செய்கின்றன. 2013ஆம் ஆண்டு இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்காக ஜிசாட்-7 மற்றும் 2018ஆம் ஆண்டு இந்திய விமானப்படைக்கான மேம்பட்ட ராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-7ஏ விண்ணில் ஏவப்பட்டன. இதன்படி, […]

இந்திய ராணுவம் 2026ஆம் ஆண்டில் ஜிசாட்-7பி என்ற புதிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு விண்வெளி பணிகளுக்கு செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்பி வருகிறது, அவை வானிலை, பேரிடர் தகவல்கள், பூமி கண்காணிப்பு, மற்றும் வாகனங்களுக்கு வழிகாட்டுதல் போன்ற உதவிகளை செய்கின்றன. 2013ஆம் ஆண்டு இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்காக ஜிசாட்-7 மற்றும் 2018ஆம் ஆண்டு இந்திய விமானப்படைக்கான மேம்பட்ட ராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-7ஏ விண்ணில் ஏவப்பட்டன.

இதன்படி, இந்திய ராணுவம் 2026ஆம் ஆண்டில் ஜிசாட்-7பி என்ற புதிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள், எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, 3 ஆயிரம் கோடி ரூபாயுடன், நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துடன் (என்.எஸ்.ஐ.எல்.) ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மேலும், 52 பிரத்யேக ராணுவ செயற்கைக்கோள்கள் 27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், ராணுவ உளவுத்துறை சேகரிப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக ஏவப்பட உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu