நிலவில் இருந்து மணல் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் திட்டத்தில் ஈடுபட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
லூனார் சாம்பிள் ரிட்டர்ன் மிஷன் (எல் எஸ் ஆர் எம்) என்ற திட்டத்தில் இஸ்ரோ பணியாற்ற உள்ளது. அதன்படி, நிலவிலிருந்து, மணல், பாறைகள் போன்றவை சேகரிக்கப்பட்டு, பூமிக்கு கொண்டுவரப்பட உள்ளன. அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என இஸ்ரோ அதிகாரி நிலேஷ் தேசாய் தெரிவித்துள்ளார். மேலும், நிலவில் உள்ள சிவசக்தி பகுதியிலிருந்து இந்த மாதிரிகள் சேகரிக்கப்படும் என கூறியுள்ளார். அண்மையில், பென்னு சிறு கோளில் இருந்து நாசா மாதிரிகளை சேகரித்தது. அதே போன்ற செயல்பாடுகளை கொண்டு, நிலவின் மாதிரிகளை சேகரிக்கும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.