செயல் இழந்த செயற்கைக்கோளை பாதுகாப்பாக தரையிறக்கும் திட்டம் - இஸ்ரோ ஆராய்ச்சி

விண்வெளியில் உள்ள செயலிழந்த செயற்கைக்கோள்களுக்கு, கட்டுப்பாட்டுடன் கூடிய பாதுகாப்பான தரையிறக்கத்தை மேற்கொள்ள இஸ்ரோ ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. அதன் பகுதியாக, கடந்த அக்டோபர் 12, 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மேகா டிராபிக் 1 (MT1) செயற்கைக்கோளை வரும் மார்ச் 7ஆம் தேதி தரையிறக்க திட்டமிட்டுள்ளது. தரையிறக்கத்திற்கு, பசிபிக் பெருங்கடலில், மனிதர்கள் ஆக்கிரமிக்காத பகுதியைச் இஸ்ரோ தேர்ந்தெடுத்துள்ளது. விண்வெளியில் உள்ள செயலிழந்த செயற்கைக்கோள்கள் விண்வெளி குப்பைகளாக சுற்றி வருகின்றன. அதனை களையும் ஆராய்ச்சியாக, இஸ்ரோவின் இந்த முயற்சி […]

விண்வெளியில் உள்ள செயலிழந்த செயற்கைக்கோள்களுக்கு, கட்டுப்பாட்டுடன் கூடிய பாதுகாப்பான தரையிறக்கத்தை மேற்கொள்ள இஸ்ரோ ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. அதன் பகுதியாக, கடந்த அக்டோபர் 12, 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மேகா டிராபிக் 1 (MT1) செயற்கைக்கோளை வரும் மார்ச் 7ஆம் தேதி தரையிறக்க திட்டமிட்டுள்ளது. தரையிறக்கத்திற்கு, பசிபிக் பெருங்கடலில், மனிதர்கள் ஆக்கிரமிக்காத பகுதியைச் இஸ்ரோ தேர்ந்தெடுத்துள்ளது.

விண்வெளியில் உள்ள செயலிழந்த செயற்கைக்கோள்கள் விண்வெளி குப்பைகளாக சுற்றி வருகின்றன. அதனை களையும் ஆராய்ச்சியாக, இஸ்ரோவின் இந்த முயற்சி இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. MT1 செயற்கைக்கோள் 1000 கிலோகிராம் எடை உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், சரியாக 867 கிலோமீட்டர் உயரத்தில், 20 டிகிரி சாய்வான சுற்றுவட்ட பாதையில் நிறுவப்பட்டிருந்தால், 100 ஆண்டுகள் வரை செயலில் இருந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. தற்போது, செயல் இழந்துள்ள இந்த செயற்கைக்கோளில், 125 கிலோ கிராம் எரிபொருள் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த எரிபொருள் செயற்கைக்கோளை கட்டுப்பாட்டுடன் பாதுகாப்பாக தரையிறக்க போதுமானதாக இஸ்ரோ கருதுகிறது. அதன்படி, இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளது. இது வெற்றியடையும் பட்சத்தில், விண்வெளி குப்பைகளுக்கான தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu