இஸ்ரோவின் மதிப்பிற்குரிய விஞ்ஞானியான லலிதாம்பிகாவுக்கு பிரெஞ்சு நாட்டின் உயரிய குடிமக்கள் விருது வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் பல்வேறு ராக்கெட் திட்டங்களில் விஞ்ஞானி லலிதாம்பிகா பணியாற்றியுள்ளார். தற்போது 60 வயது ஆகும் அவருக்கு, பிரஞ்சு நாட்டின் ‘Légion d’Honneur’ விருது வழங்கப்பட்டுள்ளது. விண்வெளி ஒத்துழைப்பு சார்ந்து இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே சிறந்த பங்களிப்பு வழங்கியதற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2018 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ஏற்பட்ட முதல் விண்வெளி ஒத்துழைப்பு திட்டத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் Thierry Mathou இந்த விருதை அவருக்கு வழங்கியுள்ளார்.