இஸ்ரோ தனது 100-வது ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது

NVS-02 செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இன்று காலை தனது 100-வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட், நிலப்பரப்பு, கடல் மற்றும் வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து, பேரிடர் காலங்களில் தகவல்களை வழங்கும் NVS-02 செயற்கைக்கோளுடன் ஏவப்பட்டது. இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன் தலைமையில் இது ஏவப்பட்ட முதல் ராக்கெட் ஆகும். 2025 ஆம் ஆண்டில் இஸ்ரோவின் முதல் திட்டமாக இதுவே அமையும். இந்த செயற்கைக்கோளின் […]

NVS-02 செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இன்று காலை தனது 100-வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட், நிலப்பரப்பு, கடல் மற்றும் வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து, பேரிடர் காலங்களில் தகவல்களை வழங்கும் NVS-02 செயற்கைக்கோளுடன் ஏவப்பட்டது. இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன் தலைமையில் இது ஏவப்பட்ட முதல் ராக்கெட் ஆகும். 2025 ஆம் ஆண்டில் இஸ்ரோவின் முதல் திட்டமாக இதுவே அமையும். இந்த செயற்கைக்கோளின் முக்கிய பயன்பாடுகளில் நிலப்பரப்பு மற்றும் கடற்படை மேலாண்மை, மொபைல் சாதனங்கள் மற்றும் அவசர கால சேவைகள் அடங்கும்.சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து 6:23 மணிக்கு ஏவப்பட்ட இந்த ராக்கெட், 19 நிமிடங்களாக பயணித்து NVS-02 செயற்கைக்கோளை வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu