உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3டி பிரிண்ட் ராக்கெட் எஞ்சின் பரிசோதனை வெற்றி - இஸ்ரோ

கடந்த வியாழக்கிழமை, 3டி பிரிண்டெட் தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ராக்கெட் என்ஜின் பரிசோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்தியா சார்பில் செயற்கைக்கோள் ஏவும் நடவடிக்கைகளுக்கு பிஎஸ்எல்வி ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டின் பி எஸ் 4 என்ஜினை பயன்படுத்தி சுமார் 665 வினாடிகளுக்கு பரிசோதனை நிகழ்த்தப்பட்டது. இஸ்ரோவின் லிக்விட் ப்ரொபஷனல் சிஸ்டம்ஸ் சென்டர் மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த எஞ்சினில், நைட்ரஜன் டெட்ராசைடை ஆக்ஸிடைசராகவும், மோனோ மெத்தில் ஹைட்ராஸினை எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த சோதனை வெற்றியடைந்ததன் மூலம், இந்தியாவின் […]

கடந்த வியாழக்கிழமை, 3டி பிரிண்டெட் தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ராக்கெட் என்ஜின் பரிசோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இந்தியா சார்பில் செயற்கைக்கோள் ஏவும் நடவடிக்கைகளுக்கு பிஎஸ்எல்வி ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டின் பி எஸ் 4 என்ஜினை பயன்படுத்தி சுமார் 665 வினாடிகளுக்கு பரிசோதனை நிகழ்த்தப்பட்டது. இஸ்ரோவின் லிக்விட் ப்ரொபஷனல் சிஸ்டம்ஸ் சென்டர் மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த எஞ்சினில், நைட்ரஜன் டெட்ராசைடை ஆக்ஸிடைசராகவும், மோனோ மெத்தில் ஹைட்ராஸினை எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த சோதனை வெற்றியடைந்ததன் மூலம், இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பத்தில் முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, 14 பாகங்களாக இருந்த எஞ்சின் பாகங்கள் ஒற்றை பாகமாக குறைகிறது. உலோக பயன்பாடு 13.7 கிலோகிராமில் இருந்து 565 கிலோகிராம் ஆக குறைகிறது. அனைத்திற்கும் மேலாக, தயாரிப்பு நேரம் 60% குறைகிறது. இந்த இன்ஜினை விப்ரோ 3டி நிறுவனம் தயாரித்து தந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu