மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்கான முக்கிய ஏர் ட்ராப் பரிசோதனை அடுத்த வாரம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ககன்யான் திட்டத்திற்கான ஏர் ட்ராப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. முதலில் இந்த வாரத்தில் நடத்தப்படுவதாக இருந்த பரிசோதனை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த முறை, இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் உதவியுடன், தரை பரப்பிலிருந்து 3.5 முதல் 4 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து, ககன்யான் கேப்சூல் கீழே வீசப்படும். அப்போது, கேப்சூலில் உள்ள பாராசூட் கருவிகளின் செயல் திறன், ஒட்டுமொத்த கேப்சூல் பாதுகாப்பு போன்றவை சோதனை செய்யப்படுகிறது. மனிதர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வருவதற்கு இந்த பரிசோதனை மிக முக்கியமாகும்.