நவம்பர் 29 ல் ஐரோப்பாவின் ப்ரோபா-3 ஏவப்படுகிறது - இஸ்ரோ அறிவிப்பு

October 15, 2024

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) ப்ரோபா-3 விண்கலம், சூரியனை ஆய்வு செய்யும் முக்கியமான பணியை மேற்கொள்ள உள்ளது. இதன் கட்டமைப்பு பணிகள் நிறைவு நிலையை எட்டியுள்ளது. இந்தியாவுக்குப் பயணிக்கத் தயாராகி வருகிறது. இந்த இரட்டை செயற்கைக்கோள் பணி, ஒரு செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்கி சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கரோனாவை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் நீடித்த இறுதிச் சோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விண்கலம் அக்டோபர் 21 அன்று […]

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) ப்ரோபா-3 விண்கலம், சூரியனை ஆய்வு செய்யும் முக்கியமான பணியை மேற்கொள்ள உள்ளது. இதன் கட்டமைப்பு பணிகள் நிறைவு நிலையை எட்டியுள்ளது. இந்தியாவுக்குப் பயணிக்கத் தயாராகி வருகிறது. இந்த இரட்டை செயற்கைக்கோள் பணி, ஒரு செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்கி சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கரோனாவை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கிட்டத்தட்ட 12 மணி நேரம் நீடித்த இறுதிச் சோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விண்கலம் அக்டோபர் 21 அன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. நவம்பர் 29 அன்று, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் ஏவுகணை மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படும். இஸ்ரோ இந்த செய்தியை உறுதி செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu