ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் ப்ரோபா-3 விண்கலத்தை விண்ணில் செலுத்தும் இஸ்ரோவின் திட்டம், விண்கலத்தில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக நாளை (டிசம்பர் 5) மாலை 4:12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், இரண்டு விண்கலங்கள் ஒன்றாக பறந்து சூரியனின் வெளிப்புற பகுதியான கொரோனாவை ஆய்வு செய்ய உள்ளன. இதில் ஒரு விண்கலம் சூரிய ஒளியைத் தடுத்து செயற்கை கிரகணத்தை உருவாக்கி, மற்றொரு விண்கலம் கொரோனாவை ஆய்வு செய்யும். இந்த திட்டம் சூரியனைப் பற்றிய ஆய்வில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.