வரும் பிப்ரவரி 17ஆம் தேதி, இன்சாட் 3டி எஸ் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து, ஜிஎஸ்எல்வி எப் 14 ராக்கெட் மூலம் இன்சாட் 3 டி எஸ் செலுத்தப்படவுள்ளது. இது இந்தியாவின் விண்வெளி சாதனைகளில் முக்கிய மைல் கல்லாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ள இன்சாட் 3டி மற்றும் இன்சாட் 3 டி ஆர் அமைப்புகளுக்கு கூடுதல் வலு சேர்க்கும் முறையில் இன்சாட் 3 டி எஸ் இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோள், வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் பருவநிலை சேவைகளுக்காக அனுப்பப்படுகிறது. பூமியிலிருந்து 35786 கிலோ மீட்டர் உயரத்தில், 82 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட உள்ளது. வரும் மார்ச் 17ஆம் தேதி வரை இன்சாட் 3டி எஸ் திட்டத்திற்கான சாளரம் திறந்திருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது..