நிலவின் சுற்றுவட்ட பாதை உயரத்தை குறைக்கும் முதல் கட்டப்பணி வெற்றிகரமாக சந்திராயன் 3 விண்கலம் மூலம் நடைபெற்றுள்ளது.
கடந்த ஜூலை மாதம் சந்திராயன் -3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது இம்மாத இறுதிக்குள் நிலவில் தரையிறங்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விஞ்ஞானிகள் இதனை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது புவி வட்டப்பாதையை சுற்றி வந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு நுழைந்துள்ளது. புவியை சுற்றி வந்த விண்கலம் நிலவைச் சுற்றத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் சந்திராயன் -3 விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையின் உயரத்தை குறைக்கும் முதல் கட்ட பணி வெற்றிகரமாக நேற்று நடைபெற்றுள்ளது. இதனால் இந்த விண்கலம் நிலவின் அருகே சென்றுள்ளது. புவியின் சுற்றுவட்ட பாதையை குறைக்கும் பணி 9-ம் தேதி ஒரு மணி முதல் 2 மணி அளவில் நடைபெற உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. புவி சுற்றுப்பாதையில் இருந்து நிலவின் சுற்று பாதைக்கு மாறியபோது எடுத்த வீடியோ தற்போது இஸ்ரோவால் நேற்று வெளியிடப்பட்டது.