சந்திரயான் 4 திட்டத்திற்கான அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதன்படி, 2 ராக்கெட்டுகளில் சந்திரயான் 4 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில், நிலவிலிருந்து கல் மற்றும் மண் மாதிரிகள் பூமிக்கு கொண்டுவரப்பட உள்ளன.
இஸ்ரோவின் எல் வி எம் 3 மற்றும் பிஎஸ்எல்வி ஆகிய 2 ராக்கெட்டுகளும் சந்திரயான் 4 திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ளன. அதாவது, ஒரே நிலவு திட்டத்திற்கு, 2 ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. வரும் 2028 ஆம் ஆண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சாத்தியமானால், நிலவின் மாதிரிகளை பூமிக்கு வெற்றிகரமாக கொண்டு வந்து சேர்க்கும் 4 வது நாடாக இந்தியா வரலாறு படைக்கும். “சந்திரயான் 3 வரையிலான நிலவு திட்டங்களில் மொத்தம் 3 தொகுதிகள் மட்டுமே இருந்தன. சந்திரயான் 4 திட்டத்தில், 5 தொகுதிகள் இருக்கும். திட்டத்தின் முக்கிய இலக்கு நிலவின் மாதிரிகளை பூமியில் சேர்ப்பதாகும்.” - இவ்வாறு இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.