துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 29 பேர் பலியாகினர்.
துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 29 பேர் பலியாகினர். அது 16 அடுக்கு குடியிருப்பு கட்டிடத்தின் தரைதளத்தில் இயங்கி வந்தது. அந்த இரவு விடுதியில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விடுதியின் மேலாளர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என கூறப்பட்டுள்ளது.