காசாவில் இருந்து தற்போது இந்தியர்களை வெளியேற்றுவது கடினம் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் nahhl உள்ள இந்தியர்களை பத்திரமாக அமைப்பதற்காக மத்திய அரசு ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை ஏற்படுத்தியது. மேலும் இதன் மூலம் இதுவரை 1200 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் காசாவில் இருந்து இந்தியர்களை தற்போது வெளியேற்றுவது மிகவும் கடினம் எனவும் இந்தியர்கள் சிக்கி இருப்பதாகவும் அவர்கள் மீட்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது உடனடியாக மீட்போம் என்றும், காசாவில் தாக்குதலில் இந்தியர்கள் யாரும் இதுவரை உயிரிழக்கவில்லை என்றும் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.