பூஸ்டர் டோஸ் ஆக செலுத்துவதற்கு கோவாக்ஸின் பாதுகாப்பானது - ஐசிஎம்ஆர்

February 4, 2023

கொரோனா தடுப்பூசி தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் வெள்ளிக்கிழமை எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், மூன்றாவது தவணை போஸ்டர் டோஸ் ஆக கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது பாதுகாப்பானது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், “கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு தவணைகளை செலுத்திக் கொண்டால், கொரோனா வைரஸுக்கு எதிரான செயல்திறன் 85% ஆக உள்ளது. அதே வேளையில், […]

கொரோனா தடுப்பூசி தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் வெள்ளிக்கிழமை எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், மூன்றாவது தவணை போஸ்டர் டோஸ் ஆக கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது பாதுகாப்பானது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், “கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு தவணைகளை செலுத்திக் கொண்டால், கொரோனா வைரஸுக்கு எதிரான செயல்திறன் 85% ஆக உள்ளது. அதே வேளையில், கோவாக்ஸின் தடுப்பூசியின் இரண்டு தவணைகளை செலுத்திக் கொண்டால் செயல் திறன் 71% ஆக உள்ளது. அதே வேளையில், கோவாக்சின் தடுப்பூசியை இரண்டு அல்லது மூன்று தவணைகளாக செலுத்திக் கொண்டால் ஆறு மாதங்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது. மேலும், புதிதாக உருவாகும் கொரோனா வைரஸ் வகைகள் பாதிப்பை எதிர்த்து போராட கோவாக்சின் சிறந்த பூஸ்டராக செயல்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu