இந்திய பங்குச் சந்தையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ, எம்பசிஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள், தங்கள் வரலாற்றிலேயே மிகவும் மோசமான கட்டத்தை பதிவு செய்துள்ளன. கடந்த 5 வருட வர்த்தகத்தின் சராசரி அளவைவிட குறைவாக, இந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பு உள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதன் உயர்ந்த பட்ச அளவைவிட 35% குறைவாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 22% குறைவாக பதிவாகியுள்ளது. டெக் மஹிந்திரா, ஹெச் சி எல் டெக், மைண்ட் ட்ரீ ஆகிய நிறுவனங்களும் கடும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. டெக் மஹிந்திரா நிறுவனம், 44% முதலீட்டாளர் நிதியை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பங்குச் சந்தையை பொறுத்தவரை, டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களே பெரும் வருவாய் ஈட்டித் தரும் நிறுவனங்களாக இருந்தன. தற்போது, அவை இரண்டும் வீழ்ந்துள்ளதால், பெரும்பாலான முதலீட்டாளர்கள் கடுமையான இழப்பை சந்தித்துள்ளனர். வல்லரசு நாடுகளில் உருவாகியுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக, தகவல் தொழில்நுட்பத் துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.