பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இருந்து விலகுகிறோம் - இத்தாலி பிரதமர் மெலோனி

September 11, 2023

பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இருந்து விலகுவதாக இத்தாலி பிரதமர் மெலோனி அறிவித்துள்ளார். ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஆசியாவை சாலை மற்றும் கடல் வழியாக இணைக்க பெல்ட் அன்ட் ரோடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று சீனா அறிவித்தது. இந்த திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜி7 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளில் இத்தாலி மட்டுமே கடந்த 2004-ம் ஆண்டு இத்திட்டத்தில் இணைந்தது. இந்த சூழ்நிலையில், சீனாவுடனான இந்த ஒப்பந்தம், இத்தாலியின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வில்லை […]

பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இருந்து விலகுவதாக இத்தாலி பிரதமர் மெலோனி அறிவித்துள்ளார்.

ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஆசியாவை சாலை மற்றும் கடல் வழியாக இணைக்க பெல்ட் அன்ட் ரோடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று சீனா அறிவித்தது. இந்த திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜி7 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளில் இத்தாலி மட்டுமே கடந்த 2004-ம் ஆண்டு இத்திட்டத்தில் இணைந்தது. இந்த சூழ்நிலையில், சீனாவுடனான இந்த ஒப்பந்தம், இத்தாலியின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வில்லை என இத்தாலி வெளியுறவு அமைச்சர் அந்தோனியோ தஜானி கூறியிருந்தார். மேலும் இத்திட்டத்தில் இணைந்தது தவறான முடிவு என இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி கூறினார்.

இந்த சூழ்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் சீன பிரதமர் லி கியாங்கும் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியும் சந்தித்துப் பேசினர். அப்போது, பெல்ட் அன்ட் ரோடு திட்டத்திலிருந்து இத்தாலி விலக முடிவு செய்துள்ளதாக மெலோனி தெரிவித்துள்ளார். இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய கியாங் வலியுறுத்தியும் மெலோனி மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங் பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தின் 3-வது கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெறும் என அறிவித்துள்ளார். இத்திட்டத்திலிருந்து மேலும் சில நாடுகள் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu