நீதிமன்ற உத்தரவால், அல்பேனியாவில் இருந்து அகதிகள் படகு மூலம் மீண்டும் இத்தாலி கொண்டு வரப்பட்டனர்.
வங்காளதேசம், எகிப்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பாவிற்கு குடியேறுகின்றனர். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுவதால், ஐரோப்பிய நாடுகள் எல்லை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 66,000 பேர் இத்தாலியில் குடியேறியதால், அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. அதன்படி, இத்தாலிக்குள் நுழைய முயன்ற 50 அகதிகளை கடலோர போலீசார் கைது செய்து, அல்பேனியாவில் உள்ள முகாமில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை நாடு கடத்த முடிவு செய்தனர். ஆனால், நீதிமன்ற உத்தரவால் நாடு கடத்தல் தடைசெய்யப்பட்டதால், அவர்கள் படகு மூலம் மீண்டும் இத்தாலி கொண்டு வரப்பட்டனர்.