இத்தாலியின் மவுண்ட் எட்னாவில் எரிமலை வெடித்ததால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கிழக்கு சிசிலியன் நகரத்தில் உள்ள மவுண்ட் எட்னாவில் எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இதிலுள்ள தீப்பிழம்பு வழிந்து சாம்பல் அருகிலுள்ள விமான நிலையத்தின் விமான ஓடுபாதை வரை பரவியது. இதனால், கட்டானியாவிற்கு செல்லும் விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. 3,330 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலை வருடத்திற்கு பல முறை வெடித்து, சாம்பலை மத்திய தரைக்கடல் தீவில் கரைக்கிறது. கடைசியாக 1992ம் ஆண்டில் பெரிய அளவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல சுற்றுலாத் தலமான கேடானியாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.