கமாரியாவில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள கமாரியா பகுதியில் செயல்படும் ஆயுதத் தொழிற்சாலையில், இன்று அதிகாலை பயங்கரமான வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து, தீயணைப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். மேலும், கட்டட இடிபாடுகளில் ஒருவர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் உள்ளது. போலீசார் இந்த சம்பவத்தை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.