ஜாக்டோ ஜியோ குழு கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த தீர்மானம்

January 8, 2024

ஜாக்டோ ஜியோ குழு பல்வேறு கோரிக்கைகளை உள்ளிட்டு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் உயர் மற்றும் மேல்நிலை ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த இருப்பதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நிறைவேற்றி உள்ளனர். மேலும் […]

ஜாக்டோ ஜியோ குழு பல்வேறு கோரிக்கைகளை உள்ளிட்டு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் உயர் மற்றும் மேல்நிலை ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த இருப்பதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நிறைவேற்றி உள்ளனர். மேலும் இதன் அடுத்த கட்ட நடவடிக்கை ஆக ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கு பிறகு பிப்ரவரி 15ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பிப்ரவரி 26 ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு திட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu