ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தல் உடன் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் ஒடிசா, ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநில அரசுகளின் பதவிக்காலம் இரண்டாம் தேதி முடிவடைந்ததால் கடந்த இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஆந்திரா, ஒடிசா ஆகிய சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நேற்று நடைபெற்றது. அதில் ஆந்திராவைப் பொறுத்தவரை 175 தொகுதிகளில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். தற்போது அங்கு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே தெலுங்கு தேசம் பா.ஜனதா கூட்டணி முன்னிலையில் இருந்தது. அதில் 175 இல் 158 இடங்களில் தெலுங்கு தேசம் முன்னிலை வகித்தது. இதனால் ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமோக வெற்றி பெற்று தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஒன்பதாம் தேதி முதல் முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. அதனை தொடர்ந்து ஆந்திரா கவர்னரிடம் ஜகன்மோகன் ரெட்டி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்