தேர்வுகளில் முறைகேடு செய்தால் ஜெயில் தண்டனை - புதிய மசோதா தாக்கல்

February 5, 2024

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை பாராளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்தார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. இதில் கடந்த 1ஆம் தேதி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து இன்று காலை பாராளுமன்றம் கூடியது. கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது பொது தேர்வு மற்றும் நுழைவு தேர்வில் முறைகேடு செய்பவர்களுக்கான தண்டனை மற்றும் அபராதம் […]

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை பாராளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்தார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. இதில் கடந்த 1ஆம் தேதி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து இன்று காலை பாராளுமன்றம் கூடியது. கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது பொது தேர்வு மற்றும் நுழைவு தேர்வில் முறைகேடு செய்பவர்களுக்கான தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் புதிய மசோதாவை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகளில் ஆள் மாறாட்டம் போன்ற மோசடிகள் நடைபெறுவதை தடுக்க இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்வுகளின் போது மோசடி செய்தால் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை, மேலும் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புக்கான தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu