இலங்கை கடற்படை கைது செய்த 11 மீனவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில், 15 மீனவர்களை இலங்கை கடற்படை, எல்லையை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்தது. பிறகு, அவர்களை சிறையிலும் அடைத்தனர். இன்று, அவர்களை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 11 மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்த 2-வது முறையான மீனவர்கள் ஆகும். புதிய 4 மீனவர்களுக்கு நிபந்தனையுடன் விடுதலை வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.